3
இலங்கை மரபுக் கதைகள் பற்றி அறிமுகம்
மரபுவழிக்கதைகள் எல்லாம் ஆதாரமுள்ளவை அல்ல. பெரும்பாலும் அவை வாய்வழி வந்தவையே. சிகிரியா, சாலியா, அசோகமாலா காதல் கதை, விகாரமகாதேவி, பூதத்தம்பி கதை, கடைசி கண்டி மன்னன் கதை போன்றவை வரலாற்று நூல்களில் பதிவாகியுள்ளன. வெளிநாட்டவர்கள் மரபு வழிக் கதைகளோடு தொடர்புள்ள ஊர்களைத் தேடிப் போய் பார்ப்பார்கள்.
இலங்கையின் தமிழ்பகுதிகளில் பல மரபுக் கதைகள் கோவிலுடன் தொடர்புள்ளவை. இராமயாணத்தில், சிவபக்தனான இராவணன் இலங்கையை ஆண்ட மன்னன் என்று குறிபிட்டுள்ளது. இது பலருக்குத் தெரிந்த கதை. இலங்கேஸ்வரன் என்று அழைக்கப்பட்ட இராவணனின் அரண்மணை இருந்த இடம், சீதை சிறைவைக்கப்பட்ட இடம், ஹணுமான் எரித்த அசோக வனம், இராவணனின் புஷ்பக விமானம் நிறுத்தி வைக்கப்படட விமதனத்தளம் இருந்த இடம், அமைத்த சுரங்கப் பாதைகள் ஒரு மரபுக் கதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் வரும் இருபது கதைகள், இந்துக்கள், பௌத்தர்கள், கத்தோலிக்கர்கள், இஸ்லாமியர்கள் வழிவந்த மரபுக் கதைகள். இது போன்று பல கதைகள் உண்டு. வாசித்து இரசியுங்கள். இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டு, வெளிநாடுளில் புலம் பெயர்ந்து வாழும்; இளம் சமுதாயததினருக்கு இக்கதைகளை சொல்லுங்கள். நம்பினால் நம்பட்டும்.
♣♣♣♣♣