பொன் குலேந்திரன் ஆகிய நான், ஒரு காலத்தில் இலங்கை யாழ்ப்பாண இராட்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவன். யாழ்ப்பாணம் பரியோவான் (St John’s College) கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்று, கொழும்பு பல்கலைகத்தில் பௌதிகத்துறையில் சிறப்பு பட்டம் பெற்றவன். இலங்கை தபால் தந்தி திணைக்களத்தில் சிரேஷ்ட அத்தியட்சகராக கடமையாற்றி, அதன் பின்னர் துபாய் , அபுதாபி, சார்ஜா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொலை தொடர்பு (Telecommunication sector) துறையில் சிரேஷ்ட பொறியியலாளராக வேலை செய்தவன். பின்னர் கனடா “டெலஸ்” (Telus) தொலை தொடர்பு ஸ்தாபனத்தில சிரேஷ்ட முகமையாளராக (Senior Product Manager) கடமையாற்றி, ஓய்வு பெற்றவன.;
தற்போது நான் ஒரு கனடா பிரஜை. பத்து வயதுமுதற் கொண்டே எழுதத் தொடங்கியவன். “குவியம்;” என்ற இணையத்தள சஞ்சிகையை நடத்தியவன். கனடா ஒன்றாரியோ மாகாணத்தில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகளுக்கும் எழுதி வருகிறேன்;. பீல் மிசிசாகா>,முது தமிழர் சங்கத்தில் ஐந்து வருடங்கள் தலைவராக இருந்தேன். “பார்வை” எனது முதல் மின்நூல் சிறுதைத் தொகுப்பு. நான்ஆங்கலத்திலும் தமிழிலும் எழுதி வருகிறேன்;.
ஆங்கிலத்தில்-
Short Stories from Sri Lanka
Hinduism a Scientific Religion & Some Temples in Sri Lanka.
Sufferings of Innocent Souls ( Short stories on HR Violations)
The Dawn ( A novel of an Immigrant family to Canada from Jaffna – Sri Lanka)
Strange Realtionship (21 Short Stories)
.அகிய நூல்களையும்
தமிழில்:
விசித்திர உறவு (சிறுகதைத் தொகுப்பு)
அழகு (சிறுகதைத் தொகுப்பு)
அருவி (கவிதைகள்)
வளரும் வணிகம்( (சந்தைப் படுத்தல்)
அறிவுக்கோர் ஆவணம் (கட்டுரைகள்)
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்;
ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளேன்.
“முகங்கள்” எனது மூன்றாவது 21 கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பு.
♣♣♣♣♣
kulendiren2509@gmail.com